விண்ணைத்தாண்டி வருவாயா
March 8, 2010 at 5:58 pm Leave a comment
“அளவு சாப்பாடு ஆர்டர் செய்து முழு சாப்பாடு பரிமாரினால் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தையே இல்லை.”
அது போல் தான் சிம்பு, த்ரிஷா நடித்து வெளி வந்துருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்.
முதன் முறையாக சிம்பு தனது நடிப்பில் நம்மை தாக்குகிறார்.அடடே சிம்புவா இப்படி என வியந்தே போகிறோம்.
மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமா மீது மோகம் கொண்டு அலையும் இளைஞனாக வரும் தமிழ்ப் பையன் சிம்புவுக்கும், பொலாரிஸில் பணியாற்றும் மலையாளியான த்ரிஷாவுக்கும் காதல், சூழல், நெருக்கம், விலகல் என உணர்வுகள அற்புதமாகப் படைத்துள்ளார் கௌதம் மேனன்.
வழக்கம் போல மதமும் இனமும் இந்தக் காதலிலும் குறுக்கிட, தோல்விப் பாதையில் திரும்புகிறது. காதலர்கள் பிரிகிறார்கள்.மீண்டும் இணைகிறார்களா என்பதை சின்ன வித்தியாசத்துடன், ஆனால் சற்றே குழப்பமான முறையில் சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன்.
பிளஸ்
- ஏஆர் ரஹ்மான் இசை, பளிச் பாடல்கள்
- சிம்பு
- படத்தில் வரும் படம்
மைனஸ்
- எது நிஜ க்ளாமாக்ஸ், எது சினிமாவுக்குள் வரும் சினிமா என்று கேள்வி நம் மனதில் தோன்றதான் செய்கிறது
- கெட்ட வார்த்தை காட்சிகள்
- லப்டாப் இல்லாத பையை சுமந்து வரும் த்ரிஷா
பன்ச்சு
- வழக்கமாக சிம்பு அவர் படத்தில் எல்லோருக்கும் செய்யும் வேலையை, கௌதம் இந்த படத்தில் சிம்புக்கு செய்துள்ளார். (Adanga azhavechirukaru la adan…)
- சிம்புவின் வித்தயாசமான நடிப்பு கௌதமின் படைப்பு.
Entry filed under: பட விமர்சனம். Tags: .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed